April 30, 2011
 

பரங்கிப்பேட்டையில் மாலை 4 to 6 மின்சாரம் நிறுத்தப்படும்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் இது நாள் வரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. நாளை (01-05-2010) முதல், நேரம் மாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.