|
கலைஞர் டிவியை முடக்க கோரிக்கை
இருநாட்களுக்கு முன் சிபிஐ தாக்கல் செய்த இரண்டாம் குற்றபத்திரிக்கையில், முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், கலைஞர் டிவிக்கு இலஞ்ச பணத்தை கொடுத்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், இவ்விவகாரத்தில் கனிமொழி, ஈடுபட்டு இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறியிருந்தது. இது தொடர்பாக வருகிற மே மாதாம் 6 ந்தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராக இருக்கிறார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் திரு ஜி ராமகிருஷ்னன், கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், விசாரனை முடியும் வரை கலைஞர் டிவியின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
|