எங்கள் திட்டத்தை 'கூகுள்' திருடிக்கொண்டு விட்டது : ஈபே
தங்களது திட்டத்தை 'கூகுள்' நிறுவனம் திருடிக்கொண்டு விட்டதாக ஈபே (ebay) மற்றும் பேபால் (paypal) கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது.
'கூகுள்' நிறுவனம் சில தினங்களுக்கு முன் 'கூகுள் வாலட்' என்ற புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது, அதாவது பயனர் தங்கள் கைபேசியையே 'கிரடிட் கார்ட்' போல பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வெளியான ஒரே நாளில் ஈபே மற்றும் பேபால் ஆகிய இரு நிறுவனங்களும் "இது தங்களுடைய திட்டம்" எனவும், தங்களின் இந்த திட்டத்தில் பணிபுரிந்தவர்களை 'கூகுள்' அதிக சம்பளம் கொடுத்து விலைக்கு வாங்கி அவர்கள் மூலமாக தங்கள் திட்டத்தைத் திருடி விட்டதாகவும் கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.